International Girl Child day

International Girl Child day

சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் மாணவியர் இல்லத்தில் “சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா” கொண்டாடப்பட்டது.

நேசக்கரங்கள் இல்ல தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். இல்ல நிறுவன செயலர் பெரியசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தை திருமணம், உரிமைகள், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் இடையூறுகள் குறித்து இல்ல மாணவயிர்களிடையே பேசினார். முன்னதாக இல்ல மாணவி சுகன்யா குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி வாசிக்க  அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

இல்ல மேலாளர் துரைசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். விழா நிகழ்வில் கேக்வெட்டி அனைத்து இல்ல குழந்தைகளுக்கும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள், இல்ல குழந்தைகளுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். விழாவில் இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா, உதவி மேலாளர் கோவிந்தராஜன், விடுதி வார்டன் கோமதி, இல்ல குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். முடிவில் இல்ல விடுதி வார்டன் மதன் நன்றி கூறினார்.